ரஜினியும், நயன்தாராவும் திடீரென சந்தித்து பேசினார்கள். கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் இச்சந்திப்பு நடந்தது. அங்கு நயன்தாரா ஒரு விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதே ஸ்டூடியோவில் ரஜினியும் எந்திரன் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தயாரான சீன்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நயன்தாரா பக்கத்து செட்டில் நடித்துக் கொண்டிருக்கும் தகவல் ரஜினி காதுக்கு எட்டியது. உடனடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த அரங்குக்குள் நுழைந்தார். அவரிடம் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். பிறகு இருவரும் தனியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
மேலும்...